பதிவு செய்த நாள்
30
ஏப்
2024
06:04
குரோதி ஆண்டு சித்திரை 18 (மே1, 2024) மாலை 5:21 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். மே 25, 2025 வரை இங்கிருக்கும் அவர் ஐந்தாம் பார்வையால் கன்னியையும், ஏழாம் பார்வையால் விருச்சிகத்தையும், ஒன்பதாம் பார்வையால் மகரத்தையும் பார்க்கிறார். ஸ்தான பலத்தை விட பார்வை பலமே குருபகவானுக்கு அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தை விட பார்க்கும் பலமே அதிகம்.
ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீன
ராசிக்காரர்களும் பரிகாரம் செய்ய வேண்டும். தெட்சிணாமூர்த்திக்கு
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்த விளக்கேற்றி வழிபட
வேண்டும். 11 அல்லது 21 விளக்குகள் ஏற்றலாம். தெட்சிணாமூர்த்தியை வலம்
வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும். அவருக்கு பிடித்த
முல்லை அல்லது மல்லிகை மாலை அணிவித்து, கொண்டைக்கடலை, வெற்றிலை, பாக்கு,
பழத்துடன் வழிபட வேண்டும்.
பார்வை பலத்தால் நன்மை யாருக்கு
உத்திரம் 2,3,4 ம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2 ம் பாதம்
விசாகம் 4 ம் பாதம், அனுஷம், கேட்டை
உத்திராடம் 2,3,4 ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 ம் பாதம்
ஸ்தான பலத்தால் நன்மை யாருக்கு
அசுவினி, பரணி, கார்த்திகை1 ம் பாதம்
புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
வக்ர காலம்
புரட்டாசி 29 (அக்.15, 2024) காலை 10:05 மணி – தை 29 (பிப்.11, 2025) காலை 10:39 மணி
அஸ்தமன காலம்
சித்திரை 20 (மே 3, 2024) காலை 9:57 மணி – வைகாசி 20 (ஜூன் 2, 2024) காலை 9:52 மணி இந்த காலத்தில் ரிக் வேதத்தைச் சேர்ந்தவர்கள் உபநயனம், திருமணம், சுபநிகழ்ச்சி நடத்தக் கூடாது. கோயில்களில் புதிய சிலை பிரதிஷ்டை செய்யக் கூடாது.
நட்சத்திர சஞ்சாரம்
1.5.2024 முதல் 12.6.2024 வரை கார்த்திகை.
12.6.2024 முதல் 19.8.2024 வரை ரோகிணி.
19.8.2024 முதல் 2.12.2024 வரை மிருகசீரிடம்.
2.12.2024 முதல் 4.4.2025 வரை ரோகிணி.
4.4.2025 முதல் 10.5.2025 வரை மிருகசீரிடம்.