Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் ... பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சந்தனம், பால்குட விழா பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தலிங்க சுவாமிகள் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி 3 பக்தர்கள் உயிரிழப்பு
எழுத்தின் அளவு:
சித்தலிங்க சுவாமிகள் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி 3 பக்தர்கள் உயிரிழப்பு

பதிவு செய்த நாள்

30 ஏப்
2024
07:04

விஜயபுரா, கர்நாடகாவில், சித்தலிங்க சுவாமிகள் திருவிழாவின்போது தேர் சக்கரத்தில் சிக்கி மூன்று பேர் பலியாகினர்.

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம், இண்டி தாலுகாவின் லச்சியானா கிராமத்தில் ஆண்டுதோறும் சித்தலிங்க சுவாமிகள் ரத உற்சவம் நடக்கும். நடப்பாண்டும் விழா நடந்தது. நிறைவு நாளான நேற்று முன்தினம் ரத உற்சவம் நடந்தது. இந்த விழாவை காண சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், தேர் சக்கரத்துக்குள் ஏழு பேர் விழுந்தனர். இதில், முஜகொண்டா, 17, சோபு ஷிண்டே, 51, ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஐந்து பேர், மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தகவல் அறிந்த இண்டி கிராமப்புற போலீசார், அங்கு வந்து விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சுரேஷ் கடகதொண்டா, 36, என்பவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் அனைவரும் லச்சியானா கிராமத்தை சேர்ந்தவர்கள்; படுகாயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. திருவிழாவின்போது ஏற்பட்ட அசம்பாவிதத்தால், கிராமத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar