கருப்பசாமி கோயில் திருவிழா; நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகள் பலி கொடுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2024 04:05
ஆயக்குடி; பழநி, ஆயக்குடி அருகே கோம்பைபட்டி கிராமத்தில் உள்ள பெரியதுரை கருப்பசாமி கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலி கொடுத்து வழிபாடு செய்தனர். பழநி யை அருகே கணக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோம்பை பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியதுரை கருப்பண்ணசாமி, தன்னாசியப்பன், செல்வவிநாயகர் கோயில் உள்ளது. கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆட்டுக்கிடாய் பலி கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு ஏப்.29 ல் கருப்பணசாமி உருவாரம் வந்து சேர்ந்தல், தீர்த்தம் செலுத்துதல் நடைபெற்றது. அப்பகுதியில் வளம் பெற வேண்டி கிராம மக்கள் ஏப்.30ல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை பலி கொடுத்து வழிபாடு செய்தனர். அனைவருக்கும் உணவு சமைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான கலந்து கொண்டனர்.