இன்று அயோத்தி செல்கிறார் திரவுபதி முர்மு; ராமர் கோயிலில் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2024 04:05
புதுடில்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாளை (மே.01) அயோத்தி சென்று ராமர் கோயில் சென்று ராமரை தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உபி. மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர்கோயிலை கடந்த ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்து கருவறையில் பாலராமர் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார். இதில் பங்கேற்க வருமாறு ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (மே.01) அயோத்தி ராமர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிறப்பு விமானம் மூலம் வரும் ஜனாதிபதியை விமான நிலையத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் வரவேற்க உள்ளனர்.