Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுருட்டுப்பள்ளி ... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் வசதி ரத்து தேவசம்போர்டு- கேரள அரசு கூட்டாக முடிவு சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் வசதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் திதி பொட்டலில் குடிக்க தண்ணீர் இன்றி பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
திருப்புவனம் திதி பொட்டலில் குடிக்க தண்ணீர் இன்றி பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

05 மே
2024
11:05

திருப்புவனம்; திருப்புவனம் திதி பொட்டலில் குடிக்க தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர். புண்ணிய நகரான திருப்புவனத்திற்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு மஹாளய அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை உள்ளிட்ட தினங்கள் உட்பட அவர்கள் மறைந்த தினங்களில் திதி,தர்ப்பணம் செய்து வணங்கி வழிபட்டால் சந்ததியினரை ஆசிர்வாதம் செய்வதாக இந்துக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. மேலும் மறைந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய 30வது நாள் மோட்ச விளக்கும் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தர நாயகி அம்மன் கோயிலிலும் இந்துக்கள் ஏற்றி வழிபடுகின்றனர். மதுரை, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தினசரி வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்லும் இடத்தில் குடிக்க தண்ணீர் வசதி ஏதும் இல்லை. கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கித்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. பக்தர்கள் கூறுகையில் திதி பொட்டலில் சிவகங்கை தேவஸ்தானம் சார்பில் திதி, தர்ப்பணம் வழங்க வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பேரூராட்சி சார்பில் அங்கு தினசரி குப்பைகளை மட்டும் அகற்றி சுத்தம் செய்து வருகின்றனர். மேலும் குளியல் தொட்டியும் அமைத்துள்ளனர். பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கும் தேவஸ்தானம் பக்தர்களுக்கு எந்த வித ஏற்பாடுகளும் செய்வதில்லை. தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர உத்தரவிட்டுள்ளது. ஆனால் திதி பொட்டலில் இதுவரை குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை. கோடை விடுமுறை காலம் என்பதால் தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் குடிக்க தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர். எனவே திதி பொட்டலில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர தேவஸ்தான நிர்வாகம் முன்வர வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு ஸ்ரீ துர்கா பகவதி ஆலய திருவிழாவில் தெய்யம் துள்ளல் , பக்தர்களைக் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar