பதிவு செய்த நாள்
10
மே
2024
11:05
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கம்மாள் காலனி சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது. அபிஷேகம் பூச்சாட்டுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, சிறப்பு அலங்காரம், சக்தி கம்பம் நடுதல், அம்மனுக்கு நகைசீர், பட்டு கொண்டு வருதல், அம்மன் அழைத்தல், திருக்கல்யாணம் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, சக்தி கரகம் அழைப்பு, அக்னி சட்டி, பால்குடம் எடுத்து வருதல், அபிஷேகம், மகாதீபம், ஆராதனை, மாவிளக்கு, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.