கோவை; கோட்டை மேடு பூமி நீளா நாயிகா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக விழா கடந்து 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று லட்சார்ச்சனை சிறப்பாக நடந்தது. விழாவில் பெருமாள் தாயாருடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். உடன் ஸ்ரீ லஷமி ஹயக்ரீவ பூவராக சுதர்சன மகாலடிமி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.