Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ... கோவை கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை கோவை கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

20 மே
2024
10:05

மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழா ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் பட்டினப்பிரவேசம் எனப்படும் ஆதின கர்த்தரை பல்லக்கில் சுமந்து வீதி உலா வரும் முக்கிய நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இவ்விழாவிற்கான கொடியேற்று விழா தருமபுரம் ஞானபுரீஸ்வரர்  கோவிலில் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் கொடி மரத்துக்கு எழுந்தருளினர். அங்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் மற்றும் வேத பாடசாலை மாணவர்கள் மந்திரம் ஓத, ஓதுவார்கள் தேவாரம் பாட மங்கள வாத்தியம் முழங்க  கோயில் கொடி மரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது. தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆதீன கட்டளை தம்பிரான்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி, பஞ்சமூர்த்திகள் திருத்தேர் உற்சவம், காவிரியில் தீர்த்தவாரி ஆகியவை 10 நாள் உற்சவத்தில் நடைபெறுகிறது. மேலும் ஆதீன மடத்தில் தருமபுர ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் குருபூஜை பெருவிழா 10 நாள் உற்சவமாக நடைபெறுகிறது. விழா நிறைவாக  30ஆம் தேதி ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பல்லக்கில் வீதி உலா வரும் பட்டினப்பிரவேசம் காட்சியும் நடைபெறுகிறது. கடந்த 2022ம் ஆண்டு பட்டினப்பிரவேச நிகழ்ச்சியின் போது ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த  நிலையில் தமிழக அரசு தடை செய்து தொடர்ந்து பக்தர்கள் எதிர்ப்பை அடுத்து மீண்டும் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar