உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2024 01:05
கோவை; உக்கடம், கோட்டைமேடு, கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் சிறப்பு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் 5ம் நாளில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் .இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.