திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோயிலில் தீர்த்தாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2024 01:05
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி செலுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற பாதாளசெம்பு முருகன் கோயில் உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜன. 21 முதல் ஆன்லைன் முன்பதிவு தரிசன முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு தினமும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள், தீர்த்தக்காவடி எடுத்து வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமிக்கு தீர்த்தாபிஷேகம் செய்து வருகின்றனர். சுகாதார ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு உள்ளனர்.