பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2024 05:05
பழநி; பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக விழா மே 16ல் கொடியேற்றம் நடந்தது. மே.21ல் யாக பூஜைகளுடன் மூலவர், உற்ஸவர் வள்ளி தேய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது விழா நாட்களில் காலையில் தந்த பல்லாக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மாலையில். தங்க பல்லாக்கு, தங்க மயில், காமதேனு ஆட்டுக்கடா, வெள்ளி யானை, வெள்ளி மயில், தங்கக்குதிரை வாகனங்களில் விழா நாட்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவில் (மே.22) இன்று காலையில் சுவாமி தோளுக்கினியானில் எழுந்தருளினார். சுவாமி தேரேற்றம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டத்தில் மாலை 4:28 மணிக்கு வடம் பிடித்தல் நடைபெற்றது. பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டனர். நான்கு ரதவீதிகளிலும் தேர் இழுத்தனர். கோயில் யானை கஸ்தூரி தேர் பின்னால் வந்தது. மாலை மணிக்கு நிலைக்கு வந்தது. அதன் பின் தேர்க்கால் பார்த்தல் நடந்தது. தேரோட்டத்தில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். பத்தாம் நாள் மே.25ல் காலை திரு ஊடல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு கொடி இறக்குதலுடன் உற்ஸவம் நிறைவு பெறும்.