சமயநல்லிணக்கத்துக்கு உதாரணமான திருவரங்குளம் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2024 05:05
புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருவரங்குளத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, சுயம்புலிங்க சிவன் கோவிலான ஸ்ரீஅரங்குளலிங்கம் சமேத பெரியநாயகி அம்பாள் கோவிலில் வை காசி விசாக பெருந்திருவிழா, கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 10.00 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் தேரோட்டம் நடந்தது. இந்த தேர் திருவிழாவில், ஜாதி பேத மற்ற முறையில் பட்டியல் இனசமூகத்தைச் சேர்ந்தவர்கள் முறைப்படி அவர்கள் சாமி ஆடி வந்து, சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு, தேரை அவர்கள் தான் முதலில் வடம் பிடித்து இழுத்து வைப்பர். அதன்படி, கோவில்பட்டியை சேர்ந்த பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர் வடத்தை தொட்டு இழுத்துவிட பின், பக்தர்கள், ஓம் நமச்சிவாய கோசத்துடன் தேரை, தேரோடும் நான்கு வீதிகளிலும் இழுத்துச்சென்றனர். இந்த தே ர் திருவிழாவில் ஜாதி பேதம் இல்லாமல் அனைவரும் சமம் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில், இக்கோவிலில் வழிபாடுமுறை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.