சித்தநாயக்கன்பாளையம் மாரியம்மன், மாகாளியம்மன் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2024 06:05
சூலூ; சித்த நாயக்கன்பாளையம் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
செலக்கரச்சல் ஊராட்சி சித்த நாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில்கள் பிரசித்தி பெற்றது. இங்கு பூச்சாட்டு திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கம்பம் நடுதல், பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடுதல், அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இன்று மாலை அலங்கரிக்கப்பட்ட தேர்களுக்கு அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்கள் இரு தேர்களையும் வடம் பிடித்து இழுத்தனர். ஓம் சக்தி; பராசக்தி என்ற கோஷங்களை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் எழுப்பி அம்மனை வழிபட்டனர். மாட் வீதிகள் வலம் வந்த தேர் நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, வைர வேல் கும்மியாட்ட குழுவினரின் கும்மி ஆட்டம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.