வைகாசி விசாகம்: 4ம் படை வீடானா சுவாமிமலையில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2024 06:05
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் ஆறுபடைவீடுகளில் 4-ம் படை வீடாகும். இங்கு வைகாசி விசாகத்தையொட்டி கோவில் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டு, சுவாமிநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணி அளவில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வீதிஉலா நடைபெறுகிறது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.