பதிவு செய்த நாள்
23
மே
2024
11:05
சென்னை; புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவில் கட்டுமானப் பணிகளுக்கு, பக்தர்களின் நிதி உதவியை, கோவில் நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது. புதுக்கோட்டை கிழக்கு 7வது தெருவில், ஸ்ரீ புவனேஸ்வரி வித்யா பீட அறங்காவலர்கள் மற்றும் சுவாமி பிரணவானந்தா ஆகியோர், 20 கோடி ரூபாய் செலவில், புவனேஸ்வரி அம்மனுக்கு கற்கோவில் கட்டுகின்றனர். இந்த ஆன்மிக பணியில், பக்தர்களும் நிதியளித்து பங்கேற்கலாம் என, கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தேனி சித்பவானந்த ஆஸ்ரம நிறுவனர் ஓம்காரானந்தா, ஸ்ரீ புவனேஸ்வரி வித்யாபீடாதிபதியாக பொறுப்பேற்றதும், சாந்தானந்த சுவாமிகள் பிரதிஷ்டை செய்ய, 20 கோடி ரூபாய் செலவில், புவனேஸ்வரி அம்மனுக்கு, புதுக்கோட்டையில் கற்கோவில் கட்டும் பணியை துவக்கினார். அவர், 15 கோடி ரூபாய் திரட்டி, கோவில் பணிகளை தொடர்ந்த நிலையில், ஓம்காரானந்தா, 2021ல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முக்தி அடைந்தார். தற்போதைய பீடாதிபதி பிரணவானந்த பிரமேந்திர சரஸ்வதி சுவாமி, அந்த பணியை தொடர்ந்து வருகிறார். பக்தர்களும் தாராளமாக நிதியளித்து, கோவில் கட்டுமான புனிதப் பணியில், தங்களையும் இணைத்துக் கொள்ளலாம். நிதியை, ஸ்ரீ ஸ்வயம் பிரகாச அவதுாத சதாசிவ டிரஸ்ட், சிட்டி யூனியன் வங்கி கணக்கு எண் 50010 10115 86346, புதுக்கோட்டை கிளை, ஐ.எப்.எஸ்.சி., எண்: சிஐயுபி0000040க்கு, அனுப்பி வைக்கலாம். யு.பி.ஐ வழியாக நிதி அனுப்ப, EzE0090047@CUB என்ற முகவரியை பயன்படுத்தலாம். மேலும் விபரங்களுக்கு, sribhuvaneshwari@gmail.com என்ற மின்னஞ்சலிலோ, 98421 76359 என்ற மொபைல் போன் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.