Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொன்னுத்தம்மன் கோவில் அருவியில் ... திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உற்சவமூர்த்திகளுக்கு மகாபிஷேகம் திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமனின் புகழுக்கு காரணம் தொண்டின் சிறப்பே..!
எழுத்தின் அளவு:
அனுமனின் புகழுக்கு காரணம் தொண்டின் சிறப்பே..!

பதிவு செய்த நாள்

29 மே
2024
11:05

திருப்பூர்;கம்பன் காவியத்தில், அனுமனின் புகழுக்கு பெரிதும் காரணம் தொண்டின் சிறப்பே என, சிறப்பு பட்டிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திருப்பூர் வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவில், நேற்று முன்தினம், திருப்பூர் கம்பன் கழகம் சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. கம்பன் காவியத்தில் அனுமனின் புகழுக்கு பெரிதும் காரணம் பக்தி பரவசமே! தொண்டின் சிறப்பே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. கம்பன் கழக பொதுசெயலாளர் ராமகிருஷ்ணன் நடுவராக பங்கேற்றார். பக்தி பரவசமே என்ற அணியில், கோவை மகேஸ்வரி சற்குரு, கடலுார் வெற்றிச்செல்வி பேசினர். தொண்டின் சிறப்பே என்ற அணியில், கோவை உமாமகேஸ்வரி, ஆடிட்டர் தெய்வநாயகி பேசினர். அனுமன் பக்தியில் சிறந்தவர் என்றும்; தொண்டின் சிறப்பே அனுமனின் புகழுக்கு காரணம் என்று, இரு அணியினரும் பேசினர். நிறைவாக, கம்பன் காவியத்தில் அனுமனின் புகழுக்கு பெரிதும் காரணம் தொண்டின் சிறப்பே என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

பட்டிமன்ற நடுவர் ராமகிருஷ்ணன் பேசியதாவது: அனுமனை போல் சிறப்பு பெற்றவர் இருக்க முடியாது. சிவன், விஷ்ணு இருவரின் அம்சம் பெற்றவர் அனுமன். மண்ணுலக மக்கள் உயர்வடைய வேண்டும் என்பதற்காக, சிரஞ்சீவியாக அனுமன் இங்கேயே இருக்க வேண்டுமென ராமர் விரும்பினார். அனுமன் ஒருவன் மட்டும், ராமரே வந்தாலும் கூட, வைகுண்டம் செல்ல விரும்பவில்லை. மண்ணுலகிலேயே இருக்கிறேன்; அடியாருக்கு அடியாராக இருக்கிறேன் என்று இருந்துவிட்டார். ராமநாமத்தை முழுமையாக கண்டு அனுபவித்தவர் அனுமன். மண்ணுலக அறத்தை காத்துக்கொண்டிருக்கிறார். ராமநாமம் ஒலிக்கும் இடமெல்லாம் சென்று அருள்பாலிக்கிறார். நல்லாட்சி மலர்ந்திட, நல்லோர் வாழ், சனாதன தர்மம் தழைத்திட, ராமநாமத்தை சொல்ல வேண்டும். அவ்வகையில், கம்பன் காவியத்தில், அனுமனின் புகழுக் பெரிதும் காரணம் பக்தி பரவசத்தை காட்டிலும், தொண்டின் சிறப்பே! இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar