பிருத்தியங்கிரா தேவி கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2024 01:05
தேவகோட்டை; தேவகோட்டை அருகே பட்டுக்குருக்கள் நகரில் உள்ள பிருத்தியங்கிரா தேவி கோவிலில் வைகாசி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அம்மனுக்கும், வைரவருக்கு ம் கருப்புக் குருக்கள் தலைமையில் அஷ்ட பைரவ ஹோமம் செய்யப்பட்டு அம்மனுக்கு வைரவருக்கு சிறப்பு அபிஷேகம் அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. சுமங்கலி பெண்கள் ஏழு பேர் ஏழு பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று அம்மன் தரிசனம் செய்தனர். இன்று தேவகோட்டையில் சொர்ண பைரவருக்கு காலை 9:00 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.