நெய்க்காரபட்டி; பழநி, நெய்க்காரபட்டி அருகே வேலூர் மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் திருவிழாவில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
பழநி, நெய்க்காரப்பட்டி பேரூராட்சி, கே.வேலூர் மண்டு காளியம்மன் கோயில், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா மே.21., அன்று சாமி சாட்டுதலுடன் துவங்கியது. ஜூன்.4ல் சண்முக நதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, தீர்த்தம் எடுத்து வந்தனர். ஜூன்.5ல் அதிகாலை பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், முடியிறக்குதல், பூச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்தனர். நேற்று (ஜூன்.7) 1008 குத்து விளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதில் பழநி சட்டமன்ற உறுப்பினர் மனைவி மெர்சி செந்தில்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அன்னதானம் வழங்கப்பட்டது.