Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் ... பாகூர் மூலநாதர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர் பாகூர் மூலநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் ஜேஷ்டாபிஷேகம் இரண்டாம் நாள்; மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
திருப்பதியில் ஜேஷ்டாபிஷேகம் இரண்டாம் நாள்; மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2024
12:06

திருப்பதி; திருமலையில் நடந்து வந்த வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நேற்று துவங்கியது. இன்று இரண்டாம் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

திருமலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசம் ஆண்டிற்கு ஒருமுறை களையப்பட்டு திருமஞ்சனம் நடத்தப்பட்டு வருகிறது. திருமஞ்சனம் முடிந்த பின் முதல் நாள் வைர கவசமும், 2ம் நாள் முத்து கவசமும் உற்சவமூர்த்திகளுக்கு அணிவிக்கப்படும். நிறைவு நாள் திருமஞ்சனம் முடிந்த பின் களையப்பட்ட தங்க கவசம் செப்பணிடப்பட்டு மீண்டும் அணிவிக்கப்படும். இந்த உற்சவத்தை தேவஸ்தானம் ஜேஷ்டாபிஷேகம் என்று குறிப்பிட்டு வருகிறது. 


இந்த உற்சவத்தால் உற்சவமூர்த்திக்கும் அவர்களுக்கு அணிவிக்கப்பட்டுள்ள கவசத்திற்கும் ஏற்பட்டுள்ள சேதங்கள் கண்டறியப்பட்டு செப்பணிடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (19ம் தேதி) திருமலையில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் துவங்கியது. முதல் நாள் திருமஞ்சனத்திற்கு பின் வைரகசவமும் நடைபெற்றது. இன்று (20ம் தேதி) 2ம் நாள் திருமஞ்சனம் நடைபெற்றது. பின் உற்சவமூர்த்திகளுக்கு முத்து கவசம் சாற்றப்பட்டு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நாளை விழா நிறைவாக காலை உற்சவமூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் தலை முதல் கால் வரை ஸ்நபன திருமஞ்சனம் நடைபெறுகிறது. அதன் பின் களையப்பட்டு செப்பணிடப்பட்ட தங்க கவசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து பூர்ணாஹூதி நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar