உடுமலை; உடுமலை பெரியகடை வீதி நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில், திருவோணம் நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது. உடுமலை பெரியகடை வீதி நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில், திருவோண நட்சத்திரத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பால், பன்னீர், தேன் உட்பட பல்வேறு வகையான திரவியங்களில் அபிேஷகத்துடன் தீபாராதனை நடந்தது.சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜை நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.