11,108 லட்டு அலங்காரத்தில் செல்வ விநாயகர் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2024 12:06
கடம்பத்துார்; கடம்பத்துார் ஒன்றியம்திருப்பந்தியூர் ஊராட்சியில் அமைந்துள்ளது ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவில். இங்கு நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று 11,108 லட்டு சிறப்பு அலங்கார தரிசனம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு செல்வவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 11,108 லட்டு அலங்காரம்துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு லட்டு அலங்காரத்தில் செல்வ விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு வழித்துணை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திருப்பந்தியூர், திருமணிக்குப்பம், ஸ்ரீபெரும்புதுார், சோகண்டி, சுங்குவார்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.