பதிவு செய்த நாள்
29
ஜூன்
2024
02:06
இந்துார் : மத்திய பிரதேசத்தில் 14 பெண்கள் உட்பட 30 பேர், முஸ்லிம் மதத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு சட்டப்படி மாறினர்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சாஜா சன்ஸ்கிருதி மன்ச் என்ற ஹிந்து அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு சார்பில் நேற்று அங்குள்ள விநாயகர் கோவிலில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 14 பெண்கள் உட்பட 30 பேர், வேத மந்திரங்கள் முழங்க, ஹிந்து மதத்திற்கு சட்டப்படி மாறினர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் சாம் பாவ்ரி கூறுகையில், “மத்திய பிரதேசத்தில் உள்ள மத சுதந்திர சட்டம் 2021ன் படி, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 30 பேர் ஹிந்து மதத்திற்கு மாறினர். அவர்கள் அனைவரும், மாவட்ட நிர்வாகத்தில் முறைப்படி இதற்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். இதில், எந்த விதிமீறலோ, கட்டாயப்படுத்தியோ மதமாற்றம் நிகழவில்லை,” என்றார்.