பதிவு செய்த நாள்
01
ஜூலை
2024
10:07
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இம்மாதம், 27ம் தேதி முதல், 31ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் காவடிகளுடன் குவிந்து மூலவரைதரிசனம் செய்வர்.
இந்நிலையில் நேற்று வார விடுமுறை ஞாயிறு மற்றும் ஆடிக்கிருத்திகை மாதம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக அதிகாலை 5:00 முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். சில பக்தர்கள் காவடிகளுடன் வந்து தங்களுது நேர்த்தி கடனை செலுத்தினர். பொதுவழியில் மூலவரை தரிசிக்க, தேர்வீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து மூன்று மணி நேரத்திற்கு பின் முருகப்பெருமானை வழிப்பட்டனர். அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசித்தனர். முன்னதாக, மூலவருக்கு அதிகாலை, 4:30 மணிக்கு பஞ்சாமிர்த அபிேஷகம், தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.