வள்ளி முருகன் கலை குழுவினரின் திருக்குறள் கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2024 11:07
அவிநாசி; திருமுருகன்பூண்டியில் உள்ள தன வர்ஷினி அவன்யூவில் வள்ளி முருகன் கலைக்குழுவினரின் 61 மற்றும் 62வது திருக்குறள் கும்மி அரங்கேற்ற விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமுருகன்பூண்டியில் உள்ள தன வர்ஷினி அவென்யூ ரிசர்வ் சைட் பகுதியில் வள்ளி முருகன் கலைக்குழு சார்பில் கும்மி கலை வரலாற்றில் முதன்முறையாக திருக்குறள் கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துரைசாமி நகர், தன வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 108 பெண்கள் கலந்து கொண்டு வரலாற்று தொடர்புடைய கிராமிய பாடல்களுக்கு திருக்குறள் விளக்க உரையுடன் நடைபெற்ற கும்மியாட்ட அரங்கேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஆசிரியர் பழனிச்சாமி, இணை ஆசிரியர் ரங்கநாதன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் கடந்த ஒரு மாத காலமாக,பெண்களுக்கு கும்மியாட்ட கலையை கற்றுத்தந்து அரங்கேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.