Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதோஷம் : சிவன் கோயில்களில் சிறப்பு ... முத்துமாரியம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ விழா முத்துமாரியம்மன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாத்தனூர் மகா சாத்தனார் கோயில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சாத்தனூர் மகா சாத்தனார் கோயில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2024
05:07

ஆர்.எஸ்.மங்கலம்; இளையான்குடி அருகே நடைபெற்ற சாத்தனூர் மகா சாத்தையனார் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாத்தனூர் மகா சாத்தையனார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழமை வாய்ந்த இக்கோயில், புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை 10:00 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக, ஜூன் 16ல் முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. ஜூலை 1 ல், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை நடந்தன. அதைத் தொடர்ந்து நேற்று நான்கு காலை யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. விழாவின் தொடர்ச்சியாக, இன்று காலை 9:00 மணிக்கு பூர்ணா குதி யாகசாலை பூஜைகள் நடைபெற்று, கடம் புறப்பாடு நடைபெற்றது. யாகசாலையில் இருந்து ஊர்வலமாகச் சென்ற சிவாச்சாரியார்கள், காலை 10:05 மணிக்கு, மூலஸ்தான கருவறை கோபுர கலசம், ராஜகோபுர கலசம் ஆகியவற்றில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில், கோயில் அறங்காவலரும், சாத்தையா மில் ஸ்டோர் உரிமையாளருமான தர்மராஜன், இந்து அறநிலை துறை ஆய்வாளர் அய்யனார், என்.எஸ்.பி.குரூப் ஆப் கம்பெனி செல்வன், அறங்காவலர் குழு தலைவர் கிருத்திகா கபில் மனோஜ், அறங்காவலர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரியில், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் மூன்று நாள் உபன்யாசம் இன்று (14ம் தேதி) மாலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ. 25ல் ... மேலும்
 
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar