Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கந்தசஷ்டி விழா: மலையேறியது ... திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி திரு விழாகாப்பு கட்டுடன் துவங்கியது! திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2 ஆண்டுக்கு ஒரு முறை தீபாவளி கொண்டாடும் கிராமம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2012
10:11

ஓசூர்: ஓசூர் அருகே, நூறு ஆண்டுக்கு முன் ஏற்பட்ட வறுமையால், ஒரு கிராமத்தினர், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, தீபாவளியை கொண்டாடுகின்றனர். அந்த பாராம்பரிய வழக்கத்தை விடாமல் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்தாண்டு தீபாவளியை கொண்டாடாமல், இந்த ஆண்டு தீபாவளியை கொண்டடி மகிழ்ந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பழைய குருபட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள், பெரும்பாலும் ஆடுவளர்ப்பு, விவசாய தொழிலில் ஈடுபடுகின்றனர்.குருபட்டி கிராமத்தில் கடந்த காலத்தில் உள்ளூரை சேர்ந்த பூர்வீக மக்கள் மட்டுமே வசித்தனர்.

தற்போது, ஓசூர் நகர வளர்ச்சி, தொழிற்சாலை பெருக்கத்தால் வெளியூர் மக்கள் அதிகளவில் குடியேறி உள்ளனர்.இவர்கள் வசிக்கும் பகுதி, புதுகுருப்பட்டியாக மாறியுள்ளது. ஆனால், பழைய குருப்பட்டி இன்னும் கிராம பகுதியாகவே உள்ளது. பொருளாதார ரீதியாக இப்பகுதி மக்கள் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை.பழைய குருப்பட்டி கிராமத்தில், தீபாவளி பண்டிகையின் போது, நூறு ஆண்டுக்கு முன், கடும் பஞ்சம் ஏற்பட்டது.சாப்பாட்டுக்கு வழியில்லாமல் மக்கள் மிகுந்த கஷ்டப்பட்டனர். மேலும், மர்ம நோயால் பலர் பலியாகினர். அப்போது, அப்பகுதி மக்களால் தீபாவளியை கொண்டாட முடியவில்லை.

ஆனால், அந்த ஊரை சுற்றியுள்ள அச்செட்டிப்பள்ளி, மத்திகிரி, கெலமங்கலம் பகுதியில் தீபாவளியை விமர்ச்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால், குருப்பட்டி கிராம மக்கள் விரக்கதியடைந்தனர்.அதன் பின், வறுமையின் பிடியில் இருந்து ஓரளவு மீண்ட பழைய குருப்பட்டி கிராம மக்கள், ஒன்று கூடி முடிவு எடுத்தனர். அதன்படி, தங்கள் வாழ்க்கைக்கு மிகுந்த அச்சுறுத்தலையும், பீதியையும் ஏற்படுத்திய அந்த தீபாவளி நாளை நினைவு கூறும் வகையில், ஒரு ஆண்டு விட்டு, ஒரு ஆண்டு தீபாவளியை கொண்டாட முடிவு செய்தனர். அன்று முதல் இன்று வரை, நூறு ஆண்டுக்கு மேலாக, பழைய குருப்பட்டி கிராம மக்கள், இரு ஆண்டுக்கு ஒரு முறை தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். கடந்தாண்டு இப்பகுதி மக்கள், பட்டாசு வெடிக்காமல், புத்தாடை அணியாமல், இனிப்பு பலகாரங்கள் செய்யாமல் தீபாவளியை கொண்டாடவில்லை.  நேற்று இப்பகுதி மக்கள், தீபாவளியை சென்ற ஆண்டுக்கும் சேர்த்து விமர்ச்சையாக கொண்டாடினர். அனைத்து குடும்பத்தினரும், புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, குழந்தைகளுடன் மகிழ்ந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar