பதிவு செய்த நாள்
14
நவ
2012
10:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, நேற்று(நவ.,13) காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. முதலில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும், அடுத்து, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும் காப்பு கட்டப்பட்டது. திருவிழாவிற்கான சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டிய பின், விரதமிருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. கோயில் துணை கமிஷனர் ராஜமாணிக்கம், கண்காணிப்பாளர் பாலலட்சுமி பங்கேற்றனர்.நவ.,18ல் சூரசம்ஹாரம்: தினமும் இரவு 7 மணிக்கு, தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில், சுவாமி எழுந்தருளி, கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வந்து அருள் பாலிப்பார். முக்கிய நிகழ்ச்சியாக, நவ.,17ல், வேல் வாங்குதல், நவ., 18ல் சூரசம்ஹாரம், நவ., 19ல் சுவாமி, தெய்வானை அம்மனுடன் சட்டத்தேரில் எழுந்தருளி, கிரிவீதியில் தேரோட்டம், மாலை 3 மணிக்கு மூலவர் முன், தயிர்சாதம் படைத்து பாவாடை தரிசனம் நடக்கும்.