அத்திவராஹி அம்மன் ஸ்வர்ண பைரவர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2024 10:07
தேவகோட்டை; தேவகோட்டை அருகே வெளிமுத்தி விலக்கு பகுதியில் பட்டுக்குருக்கள் நகர் பிருத்தியங்கிரா தேவி கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் அட்சயா மகா கணபதி, 9 1/2: அடி உயரத்தில் அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்தி அஸ்வாருட வராஹி அம்மன், 16 ஆண்டுகளாக பூஜை செய்யப்பட்ட அனுகிரஹ பாபா விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்து கோவில் விமானம் கட்டப்பட்டது. மேலும் தென் பகுதியிலேயே உயரமாக 16 அடி உயரம் கொண்ட ஸ்வர்ண பைரவர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கோவில்களின் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் விழா 5 ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. சுமங்கலி பூஜைகளும் நடந்தன 15 சிவாச்சாரியார் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தினர். பூர்ணாகுதியை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. வள்ளீஸ்வர குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் சேவுகன் அண்ணாமலை கல்லூரி தலைவர் லட்சுமணன், நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், குமார், ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.