கோவை; மேட்டுப்பாளையம் வட்டம் தேக்கம்பட்டி கிராமம் குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் ஆனி மாதம் நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மலை மேல் அமர்ந்திருக்கும் வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் மஞ்சள் நிற வஸ்திரத்தில் வெற்றிலை மாலையுடன் அனுமன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வீர ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.