Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆக., 23ல் தேனி கண்ணாத்தாள் கோயில் ... சென்னை  ‘இஸ்கான்’ சார்பில் ஜெகன்நாதர் ரத யாத்திரை சென்னை ‘இஸ்கான்’ சார்பில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி பீடாதிபதி விஜயேந்திரர் வரும் 21ல் சாதுர்மாஸ்ய விரதம் துவக்கம்
எழுத்தின் அளவு:
காஞ்சி பீடாதிபதி விஜயேந்திரர் வரும் 21ல் சாதுர்மாஸ்ய விரதம் துவக்கம்

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2024
11:07

காஞ்சிபுரம்; காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நடப்பு ஆண்டுக்கான வியாச பூஜையை வரும் 21ம் தேதி துவக்குகிறார் என, சங்கரமடம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மேலாளர் ந.சுந்தரேச அய்யர் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நடப்பு ஆண்டுக்கான வியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரதத்தை வரும் 21ல் துவக்கி, செப்டம்பர் மாதம் 18ம் தேதி வரை, ஓரிக்கை, மஹா பெரியவர் மணிமண்டபத்தில் கடைப்பிடிக்க இருக்கிறார். சாதுர்மாஸ்ய விரதம் என்பது ஆடி மாத பவுர்ணமி முதல், கார்த்திகை மாத பவுர்ணமி வரை என, தொடர்ந்து நான்கு மாதங்கள் கடைப்பிடிக்கக் கூடிய சக்தி மிக்க விரதங்களில் ஒன்றாகும். துறவியர் வேதவியாசரை வழிபட்டு இந்த விரதத்தை துவங்குவார். இவ்விரத நாட்களில் துறவியர்களை வழிபடுவது மிகவும் சிறப்பாகவும் கருதப்படுகிறது. காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இவ்விரதத்தை காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் உள்ள காஞ்சி மகா சுவாமிகள் மணிமண்டப வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பூஜை மண்டபத்தில் கடைப்பிடிக்க உள்ளார். இவ்விரத நாட்களின் போது திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீசுவரருக்கு சிறப்பு பூஜை, உலக நன்மைக்காக சதுர்வேத பாராயணம், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை கச்சேரி உள்ளிட்டவை நடைபெற உள்ளன. வரும் 27ம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69வது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 90வது ஜெயந்தி மஹோற்சவமும் ஓரிக்கை மஹா பெரியவர் மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது. பக்தர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்று காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாசி பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar