Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வயலக்காவூர் வாசீஸ்வரர் கோவில் மஹா ... உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில் ஆண்டு விழா உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வீரஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் வீரஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2024
12:07

திருவள்ளூர்; திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் அமைந்துஉள்ளது, 600 ஆண்டுகள் பழமையான வீர ஆஞ்சநேய சுவாமி கோவில். இங்கு கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு கணபதி பூஜையும், சங்கல்பமும் கலச பூஜையும், யாகசாலை பிரவேசமும் நடந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை யாகசாலை பூஜையும், பூர்ணாஹூதியும், தீபாராதனையும், வீர ஆஞ்சநேய சுவாமிக்கு சன்னிதான கலசாபிஷேகமும் நடந்தது. காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் தொடர்ந்து சன்னிதானத்தில் பஞ்சாம்ருத அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை ரதோத்ஸ்வம், பஜனை, திபாராதனை நடந்தது. திருவள்ளூரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


சேமாத்தம்மன் கோவில்; கடம்பத்துார் ஒன்றியம் வயலுார் ஊராட்சியில் அமைந்துள்ளது சேமாத்தம்மன் கோவில், மந்தைவெளியம்மன் கோவில், விக்ன விநாயகர் கோவில். இந்த மூன்று கோவில்களிலும் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் 6ம் தேதி விக்னேஷ்வர, லட்சுமி, கோமாதா பூஜையும், மகா கணபதி ஹோமமும் நடந்தது . கும்பாபிஷேக நாளான நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மூலமந்திர ஹோமமும், மகா பூர்ணாஹூதியும் நடந்தது. காலை 9:30 மணி முதல் 10:15 மணிக்குள் சேமாத்தம்மன், விக்ன விநாயகர், மந்தைவெளி அம்மன் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகமும் தொடர்ந்து விசேஷ அபிஷேகம் ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar