Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 65 அடி உயரம்; 35,000 கிலோ எடையில் ராம்நகர் ... சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்மலை கருப்புசாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடாய் வெட்டி வழிபாடு
எழுத்தின் அளவு:
தென்மலை கருப்புசாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடாய் வெட்டி வழிபாடு

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2024
05:07

கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே கடுக்காபட்டி தென்மலை கருப்புசாமி கோயிலில் நடந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடாய் வெட்டி அன்னதான விழா நடந்தது.


கோபால்பட்டி அருகே கோம்பைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கடுக்காபட்டி தென்மலையில் அமைந்துள்ளது ஆண்கள் மட்டுமே வழிபடும் கருப்புசாமி கோவில். இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஆடி திருவிழா கிடாவெட்டி சாமிக்கு படையல் இடப்பட்டு அசைவ அன்னதான விழா நடைபெறும். இக்கோவில் சிறுமலை தொடர்ச்சி தென்மலை உச்சியில் அமைந்துள்ளது. தரைப்பகுதியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடந்தும் இருசக்கர வாகனங்கள் மூலம் அடர்ந்த காட்டுப் பகுதியில் மட்டுமே செல்ல முடியும். இக்கோவிலில் வழிபாடு நடத்த ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது பெண்கள்(சாமி தரிசனம்) வழிபாடு செய்ய அனுமதி இல்லை. விருந்தில் பங்குபெற மட்டுமே பெண்களுக்கு அனுமதி. (விருந்து கோவிலிலிருந்து சற்று தொலைவில் நடைபெறும்) மலை உச்சியில் அமைந்துள்ள கருப்புசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் அதிகாலை வேளையில் 20க்கும் மேற்பட்ட கிடாய்கள், 50க்கும் மேற்பட்ட கோழிகள் நேர்த்திக்கடனாக பலியிடப்பட்டது. பின்னர் காட்டுப்பகுதியிலேயே பெரிய, பெரிய அண்டாக்களில் சமைத்து அதிகாலை முதல் பக்தர்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் கோம்பைபட்டி ஊராட்சி தலைவர் தமிழரசி கார்த்திகைசாமி, துணைத் தலைவர் ராசு, அ.தி.மு.க., நிர்வாகிகள் செடிப்பட்டி ஆண்டிச்சாமி, சின்னச்சாமி உள்ளிட்ட அய்யாபட்டி , பெருமாள்கோவில்பட்டி, செடிப்பட்டி,கடுக்காபட்டி, கோம்பைப்பட்டி, சரளப்பட்டி, மலைப்பட்டி, வேம்பாரப்பட்டி, தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar