Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 65 அடி உயரம்; 35,000 கிலோ எடையில் ராம்நகர் ... சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்மலை கருப்புசாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடாய் வெட்டி வழிபாடு
எழுத்தின் அளவு:
தென்மலை கருப்புசாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடாய் வெட்டி வழிபாடு

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2024
05:07

கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே கடுக்காபட்டி தென்மலை கருப்புசாமி கோயிலில் நடந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடாய் வெட்டி அன்னதான விழா நடந்தது.


கோபால்பட்டி அருகே கோம்பைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கடுக்காபட்டி தென்மலையில் அமைந்துள்ளது ஆண்கள் மட்டுமே வழிபடும் கருப்புசாமி கோவில். இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஆடி திருவிழா கிடாவெட்டி சாமிக்கு படையல் இடப்பட்டு அசைவ அன்னதான விழா நடைபெறும். இக்கோவில் சிறுமலை தொடர்ச்சி தென்மலை உச்சியில் அமைந்துள்ளது. தரைப்பகுதியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடந்தும் இருசக்கர வாகனங்கள் மூலம் அடர்ந்த காட்டுப் பகுதியில் மட்டுமே செல்ல முடியும். இக்கோவிலில் வழிபாடு நடத்த ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது பெண்கள்(சாமி தரிசனம்) வழிபாடு செய்ய அனுமதி இல்லை. விருந்தில் பங்குபெற மட்டுமே பெண்களுக்கு அனுமதி. (விருந்து கோவிலிலிருந்து சற்று தொலைவில் நடைபெறும்) மலை உச்சியில் அமைந்துள்ள கருப்புசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் அதிகாலை வேளையில் 20க்கும் மேற்பட்ட கிடாய்கள், 50க்கும் மேற்பட்ட கோழிகள் நேர்த்திக்கடனாக பலியிடப்பட்டது. பின்னர் காட்டுப்பகுதியிலேயே பெரிய, பெரிய அண்டாக்களில் சமைத்து அதிகாலை முதல் பக்தர்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் கோம்பைபட்டி ஊராட்சி தலைவர் தமிழரசி கார்த்திகைசாமி, துணைத் தலைவர் ராசு, அ.தி.மு.க., நிர்வாகிகள் செடிப்பட்டி ஆண்டிச்சாமி, சின்னச்சாமி உள்ளிட்ட அய்யாபட்டி , பெருமாள்கோவில்பட்டி, செடிப்பட்டி,கடுக்காபட்டி, கோம்பைப்பட்டி, சரளப்பட்டி, மலைப்பட்டி, வேம்பாரப்பட்டி, தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திரமான இன்று ... மேலும்
 
temple news
கோவை; பெரியநாயக்கன் பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
சென்னை; திருப்பதி பிரசாதத்தின் தரம் குறைந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே மேலபசலை சிவன் கோயிலில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் 108 ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகிஅம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி தேய்பிறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar