Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளை காளியம்மன் கோவிலில் ஆடி ... ஆடி முதல் செவ்வாய்; நத்தம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஆடி முதல் செவ்வாய்; நத்தம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நயினார்கோவிலில் பாதுகாப்பற்ற சூழலில் அம்பாள் தேர்; புராதானத்தை காக்க பக்தர்கள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
நயினார்கோவிலில் பாதுகாப்பற்ற சூழலில் அம்பாள் தேர்; புராதானத்தை காக்க பக்தர்கள் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2024
06:07

பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் உள்ள அம்பாள் தேர் பாதுகாப்பற்ற சூழலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் புராதானத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி, நாகநாத சுவாமி கோயில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய பெருமை பெற்றதாகும். இக்கோயில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தை சேர்ந்த நிலையில், அறநிலையத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருட்களை முதலில் நாகநாத சுவாமிக்கு எடுத்து வைப்பது வழக்கம். இதன்படி இக் கோயிலுக்குட்பட்ட உப கோயில் பலவற்றிற்கும் வருமானம் கொடுக்கிறது. இந்நிலையில் ஆடி மாத விழாவில் அம்பாள் அமர்ந்து செல்ல கோ ரதம் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரதம் 8 மாதங்களுக்கும் மேலாக அம்பாள் சன்னதி முன்பு தெருவில் பாதுகாப்பற்ற சூழலில் நிறுத்தப்பட்டுள்ளது. தேர் நிறுத்துவதற்கு கோயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த இடம் இடிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர் நிறுத்தம் பகுதியில் குப்பைகள் கொட்டி அசுத்தமான சூழலில் அவ்வப்போது தீ வைக்கின்றனர். ஏற்கனவே வெயில், மழையில் சேதம் அடைந்து வரும் தேர், தீ விபத்தில் சிக்கும் சூழலில், ஒட்டுமொத்தமாக உருக்குலையும் அபாயம் உள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். வரும் வாரங்களில் ஆடி தேர் திருவிழா ஆரம்பிக்க உள்ள சூழலில் உடனடியாக தேரை சீரமைத்து பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar