பதிவு செய்த நாள்
27
ஜூலை
2024
02:07
அவிநாசி; சிவஞான பூஜை முப்பெரும் விழா. அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள குலாலர் திருமண மண்டபத்தில், சிவஞான பூஜை முப்பெரும் விழா துவங்கியது. இன்றும் (சனி) நாளையும் (ஞாயிறு) நடைபெறும் முப்பெரும் விழாவில் சிவ பூஜை, திருமுறை இன்னிசை, நூல் வெளியீடு ஆகியவை நடைபெறுகின்றது. இதில் இன்று ஞான பூஜை சொற்பொழிவுகள் விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. அதன் பின்னர் பஞ்ச புராண வழிபாடு, திருமுறை ஞானப்பாடல் தலைப்பில் சொற்பொழிவு, மகேஸ்வர பூஜை ஆகியவையும், திருமுறை இன்னிசை கூனம்பட்டி குருகுலம் வேத சிவாகம பாடசாலை முதல்வர் ஸ்ரீலஸ்ரீ நடராஜ ஸ்வாமிகள் முன்னிலையிலும், திருத்தணி சுவாமிநாதன் திருஞானசம்பந்தர் திருவருட்செயல் தலைப்பில் பாடினார். நாளை காலை திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், ஸ்ரீ காசி மடத்தின் 21வது அதிபர் கயிலை மாமுனிவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் அருளாசியுடன், ரிடபக் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அதனை மகாதானபுரம் சிவ பூசகர் கணேச அகோர தேவ நாம தேசிகர் ஏற்றுகிறார். நிகழ்ச்சிக்கான வாழ்த்துரையை பெங்களூரு வேதாகம பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருக்கடம்பந்துறை ஆனந்த சிவாச்சாரியார், திருவானைக்காவல் அருணந்தி சிவம்,திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் உள்ளிட்டோர் வழங்குகின்றனர். அதனைத் தொடர்ந்து திருமுறை ஞானப் பாடல், சிவன்மலை முருகன் போற்றி பாமாலை நூலை கூனம்பட்டி ஸ்ரீ கல்யாணபுரி ஆதீனம் ஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாச ஸ்வாமிகள் வெளியிட்டு அருளாசி வழங்குகிறார்.