Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீனிவாசப் பெருமாள் கோயிலில் உலக ... ஆடி செவ்வாய்; அகத்தீஸ்வரர் கோவிலில் புற்றுக்கு பாலூற்றி பெண்கள் வழிபாடு ஆடி செவ்வாய்; அகத்தீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,100 ஆண்டு பழமையான கோவிலில் சேரர், சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
1,100 ஆண்டு பழமையான கோவிலில் சேரர், சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2024
05:07

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், கோவில்பாளையத்தில் தளிகீஸ்வரர் கோவில் உள்ளது. பராமரிப்பு பணியின் போது, கல்வெட்டுகள் தெரிய வந்ததால், திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர், கோவிலை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, ஒரு வட்டெழுத்து மற்றும் எட்டு தமிழ் கல்வெட்டுகளை கண்டுபிடித்தனர்.


இதுகுறித்து, வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது: கொங்கு மண்டல வரலாற்றுக்கு புதிய வெளிச்சம் கொடுக்கும் வகையில், 1,100 ஆண்டு பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டு, தளிகீஸ்வரர் கோவிலில்  கிடைத்துள்ளது. கோவில் மண்டப சுவரில், 12 வரிகள் கொண்ட வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது. இது, 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, கொங்கு நாட்டின் மத்திய பகுதிகளை ஆட்சி செய்த இடைக்கால சேரர் கோக்கண்ட வீரநாராயணன் கல்வெட்டு என்பது தெரிந்தது. அதில், ‘தன்னால் கட்டப்பட்ட இக்கோவிலுக்கு சேதம் ஏற்படுத்துபவர் சந்ததி பாழ்படும்’ என்ற பொருளில் உள்ளது. கொங்கு சோழர் வீரராசேந்திரன், 1207- – 1256, விக்கிரம சோழன், 1273 – -1305 காலத்தில் உருவாக்கப்பட்ட, எட்டு கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், பெண் பக்தர் ஒருவர், நந்தா விளக்கு எரிக்க, கோவில் கருவூலமான பண்டாரத்துக்கு அச்சு காசு கொடுத்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. எழுத்து சரியாத தெரியாததால், முழு தகவலையும் சேகரிக்க இயலவில்லை. அருகிலேயே, 1,000 ஆண்டுகள் பழமையான, வணிகர்கள் வழிபட்ட அய்யனார் சிற்பமும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில்,  புரட்டாசி மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியில் அனைத்து பைரவர் சன்னதிகளில் சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு, பராமரிப்பு பணிகளுக்காக, 5 ... மேலும்
 
temple news
சென்னை; ‘‘கோவில்களால் கலைகள் வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு உள்ளன,’’ என, செம்மொழி தமிழாய்வு மத்திய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar