Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் ... திருவொற்றியூர் தியாகராஜர் கோவில் குளத்தில் தண்ணீர் தேங்காதது ஏன்? திருவொற்றியூர் தியாகராஜர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயரால் வளர்ச்சி அடைந்த கிராமம்; பக்தர்களை காக்கும் 56 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர்
எழுத்தின் அளவு:
ஆஞ்சநேயரால் வளர்ச்சி அடைந்த கிராமம்; பக்தர்களை காக்கும் 56 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர்

பதிவு செய்த நாள்

06 ஆக
2024
11:08

கர்நாடகாவில் ஆஞ்சநேயர் கோவில்கள் ஏராளம். ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தன்மை, சிறப்பு உள்ளது. இவற்றில் ஹாசனின் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் கட்டிய பின், கிராமம் வளர்ச்சி அடைந்ததாக பக்தர்கள் நம்புகின்றனர்.

ஹாசன் நகரின், ஹனுமந்தபுரா கிராமத்தில் ‘பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவில்’ அமைந்துஉள்ளது. இந்த கோவில் தனியாரோ அல்லது அரசு சார்பிலோ கட்டப்பட்டது இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன், கிராமத்தினரே ஒன்று சேர்ந்து கட்டியதாகும். இதில், 56 அடி உயரமான ஆஞ்சநேயர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவில் கட்டிய பின், கிராமம் வளர்ச்சி அடைந்துள்ளது. பெரிய, பெரிய தொழிற்சாலைகள் கட்டப்பட்டுள்ளன.

இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது. கிராமத்தில் நிலத்துக்கு அதிக, ‘டிமாண்ட்’ உள்ளது. கிராமம் செழிப்படைந்ததற்கு, பஞ்சமுக ஆஞ்சநேயரின் ஆசியே காரணம் என, மக்கள் நம்புகின்றனர். வாரந்தோறும் சனிக்கிழமைகளில், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். அன்றைய தினம் பால் அபிஷேகம், நெய் அபிஷேகம் நடக்கிறது. கோவிலின் மகிமையை பற்றி கேள்விப்பட்டு, வெளி மாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர். ஹாசன் நகரில் இருந்து 6 கி.மீ., தொலைவில் ஹனுமந்தபுரா கிராமத்தின் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து, பஸ் வசதி, ரயில் வசதி உள்ளது. தனியார் வாகனங்களும் இயங்குகின்றன. சனிக்கிழமைகளில் வந்தால், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்களை பார்த்து ஆனந்திக்கலாம். ஆஞ்சநேயரை தரிசித்து அருளை பெறலாம். இதுபோன்று, துமகூரில், 161 அடி உயரமான பஞ்சமுகி ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. துமகூரு, குனிகல்லின் பிதனகெரேவில் உள்ள கோவிலில் உள்ள பஞ்சமுகி ஆஞ்சநேயர் சிலை, உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமை பெற்றதாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில்,  புரட்டாசி மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியில் அனைத்து பைரவர் சன்னதிகளில் சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு, பராமரிப்பு பணிகளுக்காக, 5 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar