Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஞ்சநேயரால் வளர்ச்சி அடைந்த ... வேப்ப இலை வைத்து சமைத்தாலும் கசக்காது; அம்மன் வழிபாட்டில் ஆடு, சேவல் பலியிட்டு படையல் வேப்ப இலை வைத்து சமைத்தாலும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் தியாகராஜர் கோவில் குளத்தில் தண்ணீர் தேங்காதது ஏன்?
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் தியாகராஜர் கோவில் குளத்தில் தண்ணீர் தேங்காதது ஏன்?

பதிவு செய்த நாள்

06 ஆக
2024
11:08

திருவொற்றியூர்; திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2,000 ஆண்டுகள் பழமையானது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கோவிலுக்கு வருகை தருவர்.

இக்கோவிலினுள் பிரம்ம தீர்த்தம்; வெளியே ஆதிசேஷ தீர்த்தக்குளமும் உள்ளது. ஆண்டுதோறும், தைப்பூசத்தையொட்டி, மூன்று நாட்கள், ஆதிசேஷ குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். பெரும்பாலும் இக்குளம் வறண்டு போவதால், பலமுறை தெப்ப உற்சவம் நடைபெறாமல் போய் விட்டது. கடைசியாக, கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது, குளம் முழுதுமாக நிரம்பி ரம்மியமாக காட்சியளித்தது. அதன் பின், முழுமையாக நிரம்பியதாக வரலாறு இல்லை. இந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பரில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கிடைத்த மழைப்பொழிவால், 12 படிக்கட்டுகள் அளவிற்கு தண்ணீர் தேங்கியிருந்தது. இதையடுத்து தைப்பூச தெப்ப உற்சவம் நடைபெற்றது. அதன்பின், ஒரு சில வாரங்களில் குளம் வறண்டது. தற்போது கட்டாந்தரையாக உள்ளது.

இது குறித்து நீர்நிலை ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் கூறியதாவது: ஆதிசேஷ குளத்தை பொறுத்தவரை தண்ணீர் வரத்திற்கு நீர்நிலைகள் ஆதாரம் ஏதும் கிடையாது; மழை நீர் ஒன்றே ஆதாரமாக உள்ளது. எனவே, மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி, மீண்டும் ஒருமுறை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான், அடைப்பு மற்றும் கழிவு நீர் கலப்புகள் குறித்து தெரியவரும். சில ஆண்டுகளுக்கு முன், குளத்தில் தண்ணீர் தேங்குவதற்கு ஏதுவாக, ஒன்றரை அடி அளவிற்கு களிமண் லேயர் அமைக்கப்பட்டது. தற்போது அதன் நிலை என்ன என்பது தெரியவில்லை.குளத்தில் தண்ணீர் தேங்க மாற்றுவழி யோசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில்,  புரட்டாசி மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியில் அனைத்து பைரவர் சன்னதிகளில் சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு, பராமரிப்பு பணிகளுக்காக, 5 ... மேலும்
 
temple news
சென்னை; ‘‘கோவில்களால் கலைகள் வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு உள்ளன,’’ என, செம்மொழி தமிழாய்வு மத்திய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar