Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஜடாமுனிஸ்வரர் கோயில் திருவிழா; ...  நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கு  சுவாதி சிறப்பு பூஜை நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்தாண்டுகளுக்கு பின் உத்தப்புரம் முத்தாலம்மன் கோயில் திறப்பு
எழுத்தின் அளவு:
 பத்தாண்டுகளுக்கு பின் உத்தப்புரம் முத்தாலம்மன் கோயில் திறப்பு

பதிவு செய்த நாள்

11 ஆக
2024
10:08

உசிலம்பட்டி; மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் இருசமுதாயத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் பூட்டப்பட்ட முத்தாலம்மன் கோயில் பத்தாண்டுகளுக்குப் பின் உயர்நீதி மன்ற உத்தரவுப்படி பூஜை நடத்துவதற்காக இன்று திறக்கப்பட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக முத்தாலம்மன் கோயில் பூட்டப்பட்டது. கோயிலைத் திறந்து, நாள்தோறும் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிடுமாறு ஒரு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் கோயிலைப் பூட்டி வைப்பது, சுவாமியை சிறை வைப்பதற்கு சமம் என கருத்து தெரிவித்த உயர்நீதி மன்றம், கோயிலைத் திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து இன்று காலை 8:00 மணிக்கு உசிலம்பட்டி டி.எஸ்.பி., செந்தில் குமார் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் கோயிலைத் திறந்து சுத்தப்படுத்தும் பணியில் ஒரு பிரிவினர் ஈடுபட்டனர். அப்போது மாற்று சமூகத்தினர் எங்களையும் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில் (ஆக.12) இன்று காலை 11:00 மணியளவில் சமரச பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான முடிவு எடுக்கப்படும் என போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar