கூடலூர்: சபரிமலை செல்லும், ஐயப்ப பக்தர்கள் தேக்கடியில் குவிந்து வருகின்றனர். தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் இருந்து, சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், அதிகமாக குமுளி பாதையை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு செல்லும் போது, குமுளியில் இருந்து 4 கி.மீ.,ல் உள்ள தேக்கடிக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது தேக்கடியில், அதிக ஐயப்ப பக்தர்களை காண முடிகிறது. அதனால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.