Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயிலில் ... தென்காசி கோயில்களில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவிலில் கந்த சஷ்டி: விசேஷம் ராஜ அலங்கார உடை தயாரித்து விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2012
10:11

ஈரோடு: முருகன் கோவில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு, கண்ணை பறிக்கும் வகையில் ராஜ அலங்கார உடைகள் தயாரித்து, பூஜா ஸ்டோர்களில் விற்பனைக்கு வைத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவிலிலும் கந்த சஷ்டி விழா துவங்கி நடந்து வருகிறது. 18ம் தேதி அன்று சூரசம்ஹாரம் நடக்கிறது. முன்னதாக ஒவ்வொரு கோவில்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதனால், கோவிலில் பூஜைக்கு தேவையான பூஜை பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. மேலும் முருகனுக்கு அணிவிக்கப்படும் பாசியால் ஆன ராஜ அலங்கார ஆடைகள், கிரீடம், தொப்பி, அஷ்தம் பாதம், பட்டுத்துணி என அனைத்து பொருட்களும் தற்போது நன்கு விற்பனையாகிறது. ஈரோடு மளிகை வர்த்தக சங்க செயலாளர் துவாரகநாதன் கூறியதாவது: கோவில் விசேஷம் எதுவாக இருந்தாலும், விபூதி, சந்தனம், குங்குமம் ஆகிய மூன்றும் பூஜை பொருட்களில் முக்கிய இடம்பெறும். விபூதி பழனியில் இருந்தும், சந்தனம் கும்பகோணத்தில் இருந்தும், குங்குமம் சென்னையில் இருந்தும் வரவழைக்கப்படுகிறது. விபூதி கிலோ, 40 ரூபாய்க்கும், குங்குமம், 170 ரூபாய், சந்தனம், 70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ஆண்டுதோறும் ஆடி, பங்குனி, சித்திரை ஆகிய மூன்று மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் பூஜை பொருட்கள் விற்பனை படுஜோராக இருக்கும். குறிப்பாக தை மாதம் வியாபாரம் அதிகமிருக்கும். தற்போது முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. முருகனுக்கு தேவையான ராஜா அலங்கார உடைகள் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. குழந்தை வரம் வேண்டியிருப்பவர்கள் இதுபோன்ற உடைகளை முருகனுக்கு காணிக்கையாக செலுத்துவர். வெல்வெட் துணி, பாசி, ஜமுக்கி உள்ளிட்ட பொருட்களால் ராஜ அலங்கார உடைகள் தயாரிக்கப்படுகிறது. ஒரு அடி முதல் நான்கு அடி உயரம் வரை ராஜ அலங்கார உடைகள் விற்பனைக்காக வருகின்றன. ஒரு அடி உடை செட் ஒன்று, 650 ரூபாய், இரண்டு அடி, 900 ரூபாய், மூன்றடி, 1,500 ரூபாய், நான்கடி, 1,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீலம், சிவப்பு, மாம்பழ கலர், ஆரஞ்ச் உள்ளிட்ட கலர்களில் ராஜ அலங்கார உடைகள் உள்ளன. முருகனின் தலைப்பாகையாக பாசியில் தயாரித்த கிரீடம் விற்பனைக்கு வந்துள்ளது. சிறியது முதல் பெரிய சைஸ் வரை விற்பனைக்கு வந்துள்ளது. 80 முதல், 400 ரூபாய் வரை கிரீடம் விற்பனைக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar