பதிவு செய்த நாள்
18
ஆக
2024
11:08
அவிநாசி; ஜகன் மாதா ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கால்கோல் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அவிநாசி வட்டம், திருமுருகன் பூண்டி நகராட்சிக்குட்பட்ட ராக்கிய பாளையம் பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதியதாக ஜகன்மாதா ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மற்றும் பரிவார தெய்வங்களின் மஹா கும்பாபிஷேகம் விழா, செப்டம்பர் மாதம் 16ம் தேதி நடைபெற உள்ளது.
இக்கோவிலில், ஜகன்மாதா ஸ்ரீ இராஜராஜேஸ்வரி டிரஸ்ட் சார்பில் ராஜகோபுரங்கள், ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ராஜா மாதங்கி, ஸ்ரீமஹா வாராஹி, ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மற்றும் ஸ்ரீ பைரவர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டு, சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி கோவில் ஸ்ரீ கைலாச ஆஸ்ரம மஹா ஸமஸ்தான பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜஜேயந்திர புரி மஹா ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெறுகின்றது. இதற்காக நேற்று கோவிலில், கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்குவதற்கான கால்கோல் நடும் விழா மற்றும் யாகசாலை அமைக்கும் பணிகளுக்காக கால்கோல் நடும் விழா நடைபெற்றது. இதில், ஸ்ரீ சபேஷ சிவாச்சாரியார்,பெங்களூரூ வாழும் கலை வேத ஆகம பாடசாலை, வேத விஞ்ஞான மஹா வித்யத பீடம் முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம், ஜகன் மாதா ஸ்ரீ இராஜராஜேஸ்வரி டிரஸ்ட் தலைவர் ஞானகுரு,லாவண்யா, நித்தின்,வழக்கறிஞர் சத்யநாராயணன்,வீரப்பன் அண்ட் கோ மணி,அப்பெக்ஸ் மணி உள்ளிட்ட கலந்து கொண்டனர்.