Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி ஞாயிறு விரத முறையும் பலனும்! காயத்ரி ஜபம்; இது வெறும் மந்திரம் மட்டும் அல்ல.. நோய் தீர்க்கும் மருந்து..! காயத்ரி ஜபம்; இது வெறும் மந்திரம் ...
முதல் பக்கம் » துளிகள்
ஆவணி அவிட்டம்; புனிதம் மிக்க வேத திருநாள்.. புதிய கல்வி, கலைகளை தொடங்க ஏற்ற நாள்!
எழுத்தின் அளவு:
ஆவணி அவிட்டம்; புனிதம் மிக்க வேத திருநாள்.. புதிய கல்வி, கலைகளை தொடங்க ஏற்ற நாள்!

பதிவு செய்த நாள்

19 ஆக
2024
07:08

ஆவணி அவிட்ட நட்சத்திரத்தன்று பூணூல் அணியும் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று குருமுகமாக பூஜை செய்த பின் பழைய பூணூலை அகற்றி விட்டு புதுப்பூணூல் அணிவர். அகக்கண் எனும் அறிவுக்கண் திறப்பு விழா தான் பூணூல் கல்யாணம் என்ற உபநயனம். வாமனரை வழிபட குழந்தைகளுக்கு விரைவாக உபநயனம் நடத்தும் பாக்கியம் கிடைக்கும். காயத்ரீ ஜபம் மூலம் பூமியில் குற்றங்கள் குறைந்து அனைவரும் இன்புற்று வாழ வேண்டம் என்பதே ஆவணி அவிட்டத்தின் நோக்கம்.

பூணுால் திரிப்பதை தொழிலாகக் கொண்டிருந்தார் அந்தணர் ஒருவர். ஒருநாள் அவரது மனைவி, “நீங்கள் எப்போதும் பூணுால் திரித்தால் எப்படி குடும்பம் நடக்கும்? மன்னரிடம் சென்று ஏதாவது உதவி கேளுங்கள்,” என வற்புறுத்தினாள்.

மன்னரிடம் சென்று “நான் ஒரு பூணுால் கொண்டு வந்திருக்கிறேன். அதற்கு எடைக்கு எடை மட்டும் தங்கம் கொடுங்கள்” என தானம் கேட்டார். தராசு தட்டில் பூணுால் ஒருபுறமும், தங்க காசு மறுபுறமும் வைக்கப்பட்டது.

எத்தனை காசுகள் வைத்தும் ஈடாகவில்லை. பூணுால் இருந்த தட்டு தாழ்ந்தே இருந்தது. இதைக் கண்ட அமைச்சர், நாளை வாருங்கள். தருகிறோம் என்று அனுப்பினார்.அந்தணருக்கு ஒரே பயம். பூணுாலை வைத்து மாயமந்திரம் செய்ததாக மன்னர் நினைப்பாரோ என கலங்கினார். இந்த பயத்தில் துாக்கம் வரவில்லை. மறுநாள் வழக்கமான நியமங்களைச் செய்யாமல் பயத்துடன் அரண்மனைக்கு வந்தார். தராசில் பூணுால் வைக்கப்பட்டது. ஒரு காசை வைத்தவுடன் தட்டு தாழ்ந்தது. அதை பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

இதையறிந்த மன்னர் ஆச்சரியத்துடன், “நேற்று நிறைய தங்கக்காசுகள் வைத்தும் தாழாத தராசு, இன்று ஒரே காசுக்கு தாழ்ந்தது எப்படி” எனக் கேட்டார். மன்னா... பூணுால் புனிதமானது. அந்தணர் நேற்று அன்றாட நியமங்களைச் செய்து விட்டு வந்தார். அதனால் பூணுாலுக்குரிய மதிப்பு அபரிமிதமாக இருந்தது. இன்று பயத்தில் நியமங்களைச் செய்ய மறந்தார். இதனால் ஒரு காசுக்குத் தான் அதன் மதிப்பு தேறியது” என்றார் அமைச்சர். பூணுால் அணிவதை சடங்காக கருதாமல் அதன் நியமங்களைப் பின்பற்றுவதில் தான் புனிதம் காக்கப்படும் என்பதை உணர்வோம்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனை வழிபட மிக சிறந்த நாளில் ஒன்று பிரதோஷ தினம். இன்று நந்தியின் கொம்புகளுக்கு இடையில் சிவன் ... மேலும்
 
temple news
‘சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் பலன், சிவப்பணி ஆற்றிய சிவனடியார்களை வழிபட்டாலும் கிடைக்கும்’ ... மேலும்
 
temple news
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடக்கும் பங்குனிப் பெருவிழாவில், அறுபத்து மூவர் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிமாத பெருவிழாவின் மூன்றாம் நாள், அம்பாளுடன் சுவாமி அதிகார ... மேலும்
 
temple news
தொண்டை மண்டலத்தில் மிகவும்பிரசித்தி பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். இக்கோவிலில் நுழைந்ததும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar