எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு சொல்கிறார்: சாரதா தேவியார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2026 01:04
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு. * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும். * உலக வாழ்வில் பற்று குறைய குறைய மனம் அமைதி பெறும். * உண்மையே என்றாலும் விரும்பத் தகாததை தேவையின்றிச் சொல்லாதே. * உலகம் உன் கைகளில் தான் உள்ளது. யாரும் அந்நியர் இல்லை. * தைரியத்தை இழக்காதே. வழிபாடு செய். உரிய நேரத்தில் பலன் பெறுவாய். * சாதனை படைக்க ஏற்ற காலம் இளமைப்பருவம். * மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளைச் சிந்திப்பதே தியானம். * உன்னிடம் உள்ள குறைகளைக் கண்டுபிடித்து திருத்திக் கொள். * மனதில் அன்பு இருந்தால் கடவுளை உணரலாம். * சாத்தியம் இல்லாததையும் சாதிக்கும் சக்தி பக்திக்கு உண்டு. * அமைதிக்கு நிகரான புதையல் வேறில்லை * தைரியத்துக்கு நிகரான பரிசு எங்குமில்லை. * உன் இதயத்தை வீண்மீன்கள் போல துாய்மையாக வைத்திரு. * சொற்களால் பிறரைக் காயப்படுத்தாதே. * இடைவிடாமல் கடவுளின் பெயரை ஜபித்திடு. * மனமும் உடலும் நலமுடன் இருக்க எப்போதும் பயனுள்ள பணியில் ஈடுபடு.