சதுரகிரியில் பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்கு ஆக., 31 முதல் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2024 10:08
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆவணி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்காக ஆக., 31 முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அறிவித்துள்ளது. இக்கோவிலில் ஆக., 31ல் பிரதோஷம், செப்., 2ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு ஆக.,31 முதல் செப்., 3 வரை தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் கூறுகையில், கனமழை அலர்ட் எதுவும் அறிவிக்கப்படாததால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இரவில் கோயிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் மக்காத பொருட்களை வீசிச் செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.