பதிவு செய்த நாள்
03
செப்
2024
10:09
கமுதி; கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அழகுவள்ளி அம்மன் கோயில் ஆவணி பொங்கல், முளைப்பாரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு கிராமத்தின் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் மஞ்சள் நீர் தூக்கி கொடியை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர்.கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடந்தது. மூலவரான அழகுவள்ளி அம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது. பின்பு கொடிமரத்திற்கு அம்மன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டினர். தினந்தோறும் அம்மனுக்கு சிறப்புபூஜை, அபிஷேகம் நடைபெறும்.செப்.9ல் விளக்குபூஜை,செப்.,10ல் பொங்கல்,கரகம் ஊர்வலம், செப்.11ல், அக்கினிசட்டி,பூக்குழி, வேல் குத்துதல் சாக்குவேடம், சேத்தாண்டி வேடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கப்படை கிராமமக்கள் செய்தனர்.