குருவாயூரப்பன் அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2024 11:09
பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் சரநாராயண பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதையொட்டி, காலை 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 9:00 மணிக்கு உற்சவர் சரநாராயண பெருமாள் உள்புறப்பாடாகி திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.