கடலுார்; கடலுார் அடுத்த காரைக்காடு பிள்ளையார்மேடு பச்சைவாழியம்மன் கோவிலில், 2008 பால்குட அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு லலிதா சஹஸ்ரநாம ேஹாமம் நடந்தது. இதையடுத்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின், பகல் 12:00 மணிக்கு பச்சைவாழியம்மனுக்கு 2008 பால்குட அபிஷேகம் நடந்தது. பொதுமக்கள் திரளாக தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை குலதெய்வ வழிபடுவோர் மற்றும் கிராம பொதுமக்கள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.