இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2024 03:09
ஊட்டி; ஊட்டி இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, விநாயகர் சதுர்த்தி உற்சவம் நடந்து வருகிறது. ஊட்டி லோயர் பஜார் பகுதியில் இரட்டை பிள்ளையார் கோவில் உள்ளது. நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழா இம்மாதம், 7 ம் தேதி நடக்கிறது. விழாவை ஒட்டி, இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் நடந்து வருகிறது. தினமும் காலையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு சிறப்பு பூஜை முடிந்து சுவாமி கோவில் உள் புறப்பாடு நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக விநாயகருக்கு, 108 பாலபிஷேகம், சங்காபிஷேகம், சந்தன அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் தினமும் நடந்து வருகிறது. இம்மாதம், 7 ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி இரட்டை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தினமும் நடக்கும் பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.