Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கபட்டணா தசரா விழா; ... தேவகிரி வெங்கடேசப் பெருமாள் கோவிலில் திருமலை திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜை தேவகிரி வெங்கடேசப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3 நாட்களில் 4.32 லட்சம் விநாயகர் சிலை கரைப்பு
எழுத்தின் அளவு:
3 நாட்களில் 4.32 லட்சம் விநாயகர் சிலை கரைப்பு

பதிவு செய்த நாள்

11 செப்
2024
12:09

பெங்களூரு; பெங்களூரில் மூன்று நாட்களில் 4.32 லட்சம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு உள்ளன.


கர்நாடகாவில் கடந்த 7ம் தேதி, விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வீடுகள், தெருக்கள், பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து, மக்கள் வழிபட்டனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண்ணால் ஆன, விநாயகர் சிலையை பயன்படுத்துங்கள் என, அரசு கேட்டுக் கொண்டது. பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட, எட்டு மண்டலங்களிலும் விநாயகர் சிலை வைத்து வழிபட, மாநகராட்சி அனுமதி வழங்கி இருந்தது. வணங்கிய பின், விநாயகர் சிலைகளை ஏரிகளில் கரைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் அமைக்கும் தற்காலிக குளங்களில் கரைக்க வேண்டும் என, மாநகராட்சி கூறி இருந்தது. வீடுகளின் முன்பே டேங்கர் லாரியை கொண்டு, விநாயகர் சிலையை கரைக்கும் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருந்தது. கடந்த 7, 8, 9ம் தேதிகளில் பெங்களூரில் 4 லட்சத்து 32 ஆயிரத்து 563 சிலைகள் கரைக்கப்பட்டு உள்ளதாக, நேற்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த மூன்று நாட்களும் விநாயகர் சிலைகளை வாகனங்களில் எடுத்துச் சென்று, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் மக்கள் கரைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி திதியொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar