கமுதி; கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அழகு வள்ளியம்மன் கோயில் ஆவணி பொங்கல், முளைப்பாரி விழா முன்னிட்டு செப்.1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை,அபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் சக்தி கரகம், அக்கினி சட்டி, பால்குடம்,கரும்பாலை தொட்டி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று கோயிலில் முன்பு பூக்குழி இறங்கினர்.அழகுவள்ளி அம்மனுக்கு பால்,சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்புபூஜை நடந்தது. கிராமமக்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் கமுதி, முதுகுளத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.